விருதுநகரில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிப்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

விருதுநகரில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிப்பு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
Updated on
1 min read

விருதுநகர் பஜாரில் சேதமடைந்த 100 ஆண்டுகள் பழமையான தனியார் கட்டிடங்கள் நகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டன.

விருதுநகர் பஜார் வழியாகவே அருப்புக் கோட்டை, சாத்தூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுகின்றன. குறுகி வரும் பஜார் சாலையின் மையப் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தனியார் கட்டிடங்கள் உள்ளன. இவை சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக நகராட்சி நிர்வாகமே பழமையான கட்டிடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்தது.

நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி கூறு கையில், கட்டிடத்தை இடிக்குமாறு கட்டிட உரிமையாளர்களுக்கு அறிவுறுத் தியும் இடிக்கவில்லை. அசம்பா விதத்தைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த கட் டிடங்கள் இடிக்கப்படுகின்றன, என்றார். வட்டாட்சியர் முத்துலட்சுமி, அலுவலர்கள் இப்பணிகளை ஆய்வுசெய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in