Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM

திமுக சார்பில் இளையோர் வேலைவாய்ப்பு முகாம்ரிஷிவந்தியத்தில் இன்றும் நடக்கிறது

ரிஷிவந்தியத்தில் திமுக சார்பில் நடைபெற்று வரும் வேலை வாய்ப்பு முகாமில், முதல் நாளான நேற்று பங்கேற்று வேலைவாய்ப்பு கிடைத்த ஒருவருக்கு பணியாணை வழங்குகிறார் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட கோமலூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்றும் திமுக சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் தொடங்கியது. இந்த வேலை வாய்ப்பு முகாம் இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னரும், கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொறுப்பாளருமான வசந்தம் கார்த்தி கேயன் இம்முகாமைத் தொடங்கி வைத்தார்.

கிராமங்கள் நிறைந்த ரிஷிவந்தியம் தொகுதி இளைஞர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் படித்து முடித்த மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்ட இம்முகாமில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்று, தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றன.

இம்முகாமில் பொறியியல், பட்டை யம், இளங்கலை, முதுநிலை, ஐடிஐ, நர்சிங் முடித்த மாணவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்று வருவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற இளைஞர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டிநடத்தப்படும் இம்முகாம் நடத்தப்படு வதாக வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x