நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் லோக் அதாலத் மூலம் 597 வழக்குகளுக்கு தீர்வு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில்   லோக் அதாலத் மூலம் 597 வழக்குகளுக்கு தீர்வு
Updated on
1 min read

தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தேசியமக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திருநெல்வேலி உட்பட 9 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களால் 15 அமர்வுகளாக லோக் அதாலத்நடத்தப்பட்டது. திருநெல்வேலியிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஏ. நசீர் அகமது தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதிகள் விஜயகாந்த், இந்திராணி, குமரேசன், பத்மா, கிறிஸ்டல் பபிதா, பிஸ்மிதா, கெங்கராஜ், சுப்பையா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வஷீத்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 2003 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 458 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.12.25 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.ஹேமா, நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும்மாவட்ட நீதிபதி எஸ்.உமா மகேஸ்வரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.பாஸ்கர், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜே.ஆப்ரீன் பேகம், நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிகள் ஆர்.எச். உமாதேவி, கே.சக்திவேல், ராஜ குமரேசன் கலந்துகொண்டனர். இதில் 997 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 139 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.2,70,50,894 வழங்கஉத்தரவிடப்பட்டது.

கோவில்பட்டி

நாகர்கோவில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in