வேலூர், ஆற்காட்டில் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் இலவச பேருந்து சேவையுடன் ஆட்டோக்கள் இயக்கம்

ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, ஆற்காட்டில் இருந்து கலவைக்கு இயக்கப்பட்ட இலவச பேருந்து சேவை.
ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, ஆற்காட்டில் இருந்து கலவைக்கு இயக்கப்பட்ட இலவச பேருந்து சேவை.
Updated on
1 min read

வேலூர், ஆற்காட்டில் ரஜினிகாந்த் பிறந்த நாளை யொட்டி பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை வசதியுடன், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.

ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி வேலூர், ஆற்காட்டில் அவரது ரசிகர் கள் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், இலவச பேருந்து சேவையு டன், ஆட்டோ சேவையை தொடங்கினர். வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற மாவீரன். இவர், அதே பகுதியில் உள்ள‘படையப்பா’ ரஜினி மக்கள் மன்ற செயலாளராக உள்ளார். ஆட்டோ ஓட்டுநரான இவர், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

ரஜினிகாந்த் பிறந்த நாளான நேற்று ராஜேஷ்,தனது ஆட்டோவில் பயணிக் கும் அனைவருக்கும் இலவச சேவை என்று போஸ்டரை ஒட்டியிருந்தார். மேலும், ‘ஆட்சி மாற்றம் இப்போது இல்லன்னா, எப்போதும் இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோவில் அனை வருக்கும் இலவசம்’ என்றும் அந்த போஸ்டரில் எழுதப் பட்டிருந்தது.

இதுகுறித்து ராஜேஷ் கூறும்போது, ‘‘சிறு வயதில் இருந்தே ரஜினிகாந்த் ரசி கனாக இருக்கிறேன். அவரது அனைத்து படத்தையும் திருவிழா போல கொண்டாடு வோம். எனக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகனுக்கு ரஜினி என்றும், இரண்டா வது மகனுக்கு படையப்பா என்றும், மகளுக்கு ரஜினி காந்த் மகளான ஐஸ்வர் யாவின் பெயரை வைத்துள்ளேன்’’ என்றார்.

ஆற்காடு

மேலும், ஆற்காட்டில் இருந்து பல்வேறு பகுதி களுக்கு செல்லக்கூடிய இரண்டு ஆட்டோக்களில் இலவச சேவையையும் தொடங்கி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in