ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி உயிரிழப்பு

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து நோயாளி உயிரிழப்பு
Updated on
1 min read

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அதீத மூச்சுத்திணறல் காரணமாக ஓய்வு பெற்றஅரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநர் பாஸ்கரன் (58) என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை மேல்சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார்மருத்துவனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு,அவரது மனைவி சுந்தரி (55) மற்றும் உறவினரான பிச்சைக்காரன் ஆகியோர் சென்றனர். உளுந்தூர் பேட்டையை அடுத்த செம்பியன்மாதேவி கிராம பேருந்துநிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாலையை குறுக்கிட்டார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவர் மீது மோதாமல் இருக்க வாகனத்தை நிறுத்த முயன்றார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நோயாளி பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடன் வந்த இருவரும் காயமடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in