‘கற்போம் எழுதுவோம்' இயக்க பயிற்சி மையத்தில் சிஇஓ ஆய்வு

‘கற்போம் எழுதுவோம்' இயக்க பயிற்சி மையத்தில் சிஇஓ ஆய்வு
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே கைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் எழுத்தறிவு இல்லாதோருக்கான ‘கற்போம் எழுதுவோம்’ இயக்க பயிற்சி மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் எழுத்தறிவற்ற மக்களை எழுத்தறிவு பெற்றவர்களாக மாற்றும் வகையில் 'கற்போம் எழுதுவோம்' எனும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில், முதல்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத 7,949 பேருக்கு 398 மையங்களில் கடந்த மாதத்தில் இருந்து தன்னார்வலர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி ஒரு கல்வி ஆண்டில் 3 கட்டங்களாக நடைபெறும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in