சுவர் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

சுவர் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

விழுப்புரம் அருகே சீனுவாசா புரத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (45). இவருக்கு திருமணமாகிஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.கொத்தனார் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் தனக்குச் சொந்தமான பழைய குடிசை வீட்டின் சுவரை இடிக் கும் பணியில் ஈடுபட்டார்.

மழையில் நனைந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இடிபாட் டிற்குள் சிக்கிய ராமசந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த் தனர்.

அங்கு ராமசந்திரன் உயிரி ழந்தார். இதுகுறித்து வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in