சுத்தம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிவறை

சுத்தம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிவறை
Updated on
1 min read

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, 97 பயனாளி களுக்கு ரூ. 65.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாற்றுத் திறனாளிகள், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பிரத்யேக கழிவறை சுகாதாரமின்றி இருந்ததால், கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுதொடர்பான செய்தி, இந்துதமிழ் நாளிதழில் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தின் தரைத் தளத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள் பிரத்யேக கழிவறை சீரமைக்கப்பட்டு, நேற்று சுத்தம் செய்யப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தின் தரைதளத்தின் இருமருங்கிலும் பிரத்யேக கழிவறை உண்டு, இவற்றைமுறையாக பராமரிக்க வேண்டும். தற்போது சுத்தம் செய்யப்பட்டாலும், அவற்றை தொடர்ந்து சுத்தமாக பராமரிக்கவேண்டும் என மாற்றுத்திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in