இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு மரியாதை செலுத்த சென்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு, பெரியார் திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து திருப்பூரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 6-ம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அவரது மணிமண்டபத்துக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றார். அங்கு ஏற்கெனவே கூடியிருந்த பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அங்கிருந்து வெளியேறவும் வலியுறுத்தினர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் துறையினரால் அர்ஜூன் சம்பத் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, சம்பவத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in