Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM

காஞ்சி, செங்கையில் குடிமராமத்து திட்டத்தில் புனரமைக்கப்பட்ட 59 ஏரிகள் நிரம்பின

செங்கை/காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 36 ஏரிகளில் ரூ.15 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணி கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் மூலம் ஏரிகளின் வரத்து வாய்க்கால்கள், கலங்கள் சரி செய்யப்பட்டன. தற்போது பெய்து வரும் மழையில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்ட 36 ஏரிகளும் நிரம்பிவிட்டன. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 29 ஏரிகளில் ரூ.15 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள

செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டங்களில் விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்து திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x