Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுகை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் ஒடுக்கூரைச் சேர்ந்தவர் மணி என்ற கே.போஸ்மணி(35). இவரது மனைவி அமுதா(28). தம்பதியருக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதை அடுத்து, 2015-ம் ஆண்டில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அமுதா மீது போஸ்மணி கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து மாத்தூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து, போஸ்மணியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட போஸ்மணிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆர்.சத்யா நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x