Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM

மெத்தை பஞ்சு நிறுவனத்தில் தீ விபத்து

கரூர்

கரூர் மெத்தை பஞ்சு நிறுவனத் தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

கரூர் காந்திகிராமம் பகுதியில் மெத்தைகளுக்கான பருத்தி பஞ்சு தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென புகை ஏற்பட்டு அங்கிருந்த பஞ்சுகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தொழிலாளர்கள் உடனடி யாக அங்கிருந்து வெளியேறி, கரூர் தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x