Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM

சுண்ணாம்புக் கல் சுரங்கம் விரிவாக்கம் கயர்லாபாத்தில் இன்றும், நாளையும் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

அரியலூர்

அரியலூர் அருகே உள்ள தமிழ்நாடு அரசு சிமென்ட் நிறுவனம் சார்பில் கயர்லாபாத், கல்லங்குறிச்சி, அமீனாபாத், குருமஞ்சாவடி ஆகிய கிராமங்களில் உள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை விரிவாக்கம் செய்வது குறித்து கயர்லாபாத் கிராமத்திலுள்ள சமுதாயக் கூடத்தில் இன்றும் நாளையும் (டிச.10, 11) காலை 10.30 மணிக்கு பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

முதல் நாள் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கயர்லாபாத் கிராம மக்களும், 2-ம் நாள் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல்லங்குறிச்சி, அமீனாபாத், குருமஞ்சாவடி கிராம மக்களும் கலந்துகொண்டு தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்களை பெறலாம். மேலும், பொது மக்கள் தங்களின் கருத்துகளையும் கூறலாம்.

இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு டெல்லியிலுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு அனுப்பிவைக் கப்படும்.

கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் த.ரத்னா தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x