மத்திய மண்டலத்தில் 139 பேர் டிஸ்சார்ஜ்

மத்திய மண்டலத்தில் 139 பேர் டிஸ்சார்ஜ்
Updated on
1 min read

திருச்சி மாவட்டத்தில் 25 பேருக்கும், தஞ்சாவூரில் 23 பேருக்கும், திருவாரூரில் 29 பேருக்கும், நாகையில் 25 பேருக்கும், புதுக்கோட்டையில் 17 பேருக்கும், கரூரில் 12 பேருக்கும், அரியலூரில் 3 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 17, அரியலூரில் 6, கரூரில் 15, திருவாரூரில் 27, தஞ்சாவூரில் 29, புதுக்கோட்டையில் 8, நாகையில் 37 என 139 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். திருவாரூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in