Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

ஏர் கலப்பையுடன் காங். ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்/ கரூர்

மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மதுக்கூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பையுடன் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு, அனுமதி கிடைக்காததால் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டை யார் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பட்டுக்கோட்டை என்.ராஜேந்திரன் பேசினார்.

தோகைமலையில்...

வேளாண் திருத்தச் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் காவல் காரன்பட்டியில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தோகைமலை வட்டாரத் தலைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.

கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி ஆகியோர் பேரணியைத் தொடங்கி வைத்தனர். கரூர் மாவட்டத் தலைவர் சின்னசாமி, மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேருந்து நிறுத்தம் அருகே பேரணி வந்தபோது ஒலி பெருக்கியில் பேச போலீஸார் அனுமதிக்கவில்லை எனக் கூறி, எம்.பி.ஜோதிமணி உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் அனுமதி வழங்கியதை அடுத்து மறியலை கைவிட்டு எம்.பி. செ.ஜோதிமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x