வேலூரில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் திருடிய இருவர் சிக்கினர்

வேலூரில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் திருடிய இருவர் சிக்கினர்
Updated on
1 min read

வேலூரில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் 250 பவுன் தங்க நகைகளை திருடியதாக இரண்டு பேர் சிக்கியுள்ளனர்.

வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (60). இவர், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிரபலமான பிரியாணி கடையின் உரிமையாளர் ஆவார். இவர், மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த 22-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள், சுமார் 250 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இது தொடர்பாக தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

மேலும், வேலூர் கலால் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் தனியாக விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த இரண்டு பேரை திருநாவுக்கரசு தலைமையிலான தனிப் படையினர் நேற்று பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நகைகளை மீட்க ஆந்திராவுக்கு காவலர்கள் விரைந் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in