Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

டிச.8 விவசாயிகளின் வேலைநிறுத்தத்துக்கு ஏஐடியுசி ஆதரவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 8-ம் தேதி நாடு தழுவியவேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு, ஏஐடியுசி சார்பில் ஆதரவுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி திருப்பூரில் நேற்று நடந்த ஏஐடியுசி கூட்டத்துக்கு மாநிலத் தலைவரும், திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமை வகித்தார்.

டெல்லியில் விவசாயிகள் போராடி வருவது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல; முழு இந்தியாவையும் காப்பாற்றுவதாகும். மத்திய அரசு விவசாயிகளிடம் அடக்குமுறையை பயன்படுத்துகிறது.

இந்நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் விடுத்துள்ள அழைப்புக்கு, தமிழ்நாடு ஏஐடியுசி முழு ஆதரவு அளிக்கிறது.

அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர் அமைப்புகள், வணிகர் சங்கங்கள் உட்படபல்வேறு அமைப்பினரும் ஆதரவு அளித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x