ஆலங்குடியில் அரசு கல்லூரி தொடங்க கோரிக்கை

ஆலங்குடியில் அரசு கல்லூரி தொடங்க கோரிக்கை

Published on

புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மங்கள பாண்டியன் பேசினார். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆலங்குடியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in