வந்தவாசி அருகே கொட்டகை விழுந்து பெண் உயிரிழப்பு

வந்தவாசி அருகே கொட்டகை விழுந்து பெண் உயிரிழப்பு
Updated on
1 min read

வந்தவாசி அருகே கொட்டகை விழுந்து பெண் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தில் வசித்தவர் ஏழுமலை மனைவி லட்சுமி(50). இவர், நேற்று தனது வீட்டின் பின் பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கொட்டகை சரிந்து விழுந்தது.

இதில், படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர் மழையால் கொட்டகை சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து சம்பவ இடத்துக்கு சென்று செய்யாறு கோட்டாட்சியர் விமலா மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கீழ்கொடுங் காலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in