Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

வீடுகளில் 23 பவுன் திருட்டு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் பூட்டிய வீட்டில் 16 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆவியூர் கருப்பசாமி நகரைச் சேர்ந்த விவசாயி சூரியன்(48). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு குரண்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விளைபொருட்களை பாதுகாப்பதற்காக தனது மனைவியுடன் சென்றுள்ளார். நேற்று வீடு திரும்பிய சூரியன், மின் பெட்டியில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து சென்றபோது, பீரோவில் இருந்த 16 பவுன் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆவியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் புளிக்காரத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி முத்துலெட்சுமி (27). இவர், கடந்த 1-ம் தேதி மதுரையில் உடல் நலம் பாதித்த உறவினரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டுச் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு திருடப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 1.18 லட்சம். இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x