கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள். (உள்படம்) கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது.
கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள். (உள்படம்) கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது.
Updated on
1 min read

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, நவ.29-ல் கணபதி, லட்சுமி, நவக்ரஹ ஹோமங்கள், தன, கோ பூஜைகள், கிராமசாந்தியுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்றன. நவ.30-ம் தேதி சாந்தி, திசா, மூர்த்தி ஹோமங்கள். டிச.1-ல் பரிவார மூர்த்திகள் யாக சாலை பிரவேசம், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்த மருந்து சாற்றுதல், டிச.2-ல் விநாயகர் வழி பாடு, நேற்று முன்தினம் அஷ்ட பந்தனம், ஸ்வர்ணபந்தனம் சாற் றுதல் ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து, கோயிலில் நேற்று அதிகாலை மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கடங்கள் புறப்பாடு ஆகியன நடைபெற்றன. அதையடுத்து, அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தவேண்டும் என்ற பல்வேறு அமைப்புகளின் வலியுறுத்திய தாலும் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி யும் சம்ஸ்கிருதத்துடன் தமிழிலும் கும்பா பிஷேகம் நடைபெற்றது. இதில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (டிச.5) முதல் மண்டலாபிஷேம் நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டத்தில்...

நீராழி மண்டபத்துக்கு...

இதையடுத்து, நேற்று காலை 10.30 மணியளவில் நீராழி மண்ட பத்தின் கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப் பட்டு, கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. இதில், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், கோயில் தனி அதிகாரி வீரசெல்வம் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in