வடலூருக்கு இன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல்

வடலூருக்கு இன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வருகை எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல்
Updated on
1 min read

வடலூருக்கு சட்டமன்ற தேர்தல் திமுக அறிக்கை தயாரிக்கும் குழு இன்று வருகை தர உள்ளதாக

கடலூர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வடலூர் மங்கையர்கரசி திருமண மண்டபத்திற்கு இன்று (நவ.4) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி யளவில் வருகை தர உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த பொதுநல சங்கங்கள், வணிக அமைப்புகள், கடலூர் கிழக்கு, மேற்கு மாவட்டத்திலுள்ள திமுக நிர்வாகிகள்கலந்துக் கொள் ளலாம்.

தங்கள் பகுதிகளில் உள்ள பொதுவான பிரச்சினைகள், அதற்கான தீர்வு குறித்து கோரிக் கைகளை நேரில் வந்து தேர்தல்அறிக்கை தயாரிக்கும் குழுவி னரிடம் வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in