வைகை ஆற்றில் நுரை அமைச்சர் விளக்கம்

வைகை ஆற்றில் நுரை அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

மதுரை வைகை ஆற்றில் ரசாயனக் கழிவால் நுரை ஏற்பட்டதாகக் கூறுவது பொய்யான தகவல் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், வைகை ஆற்றில் ரசாயன கழிவால் நுரை வருவதாகக் கூறப்படுவது பொய்யான தகவல். மதுரையில் சாயம் தொடர்பான தொழிற்சாலைகள் இல்லாத நிலையில், மழையின் முதல் நீர், கழிவுகளுடன் சேர்ந்து நுரையாகியுள்ளது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in