Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

கார் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

சூளகிரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

ஈரோடு ரங்கப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் தினேஷ் (26). தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ், உதயகுமார், பிரபு, யுவராஜ். இவர்கள் நேற்று முன்தினம் இரவு காரில் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் சூளகிரி அருகே சுண்டகிரி என்னுமிடத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் சூளகிரி போலீஸார் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x