செஞ்சி அருகே ஆர்.நயம்பாடியில் மனைவி இறந்த சோகத்தில் கணவரும் தற்கொலை

குணசாலி, முத்துகிருஷ்ணன்.
குணசாலி, முத்துகிருஷ்ணன்.
Updated on
1 min read

செஞ்சியை அடுத்த ஆர்.நயம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (64). இவர், நேற்று முன்தினம் மதியம் சாப்பிடும் போது குழம்பு சரியில்லை என மனைவி குணசாலியை(54) திட்டி உள்ளார். இதில் மனவேதனை அடைந்த குணசாலி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குணசாலி இறந்தார்.

வீட்டுக்குச் சென்ற முத்து கிருஷ்ணன், மனைவி இறந்ததை நினைத்து மனவேதனை அடைந்தார். அவரும் அன்று இரவு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கமடைந்தார். அக்கம்பக்கத்து வீட்டினர் முத்துகிருஷ்ணை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் முத்துகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முத்துகிருஷ்ணன், அவரது மனைவி குணசாலி ஆகியோரது உடல், பிரதே பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in