Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

விவசாயிகளுக்கு ஆதரவாக வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் ஸ்டேட் வங்கி முன் மார்க்சிஸ்ட் கட்சி யினர் நேற்று முற்றுகைப் போராட் டம் நடத்தினர். நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சுகந்தி, மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட 6 பெண்கள் உட்பட 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, அருப்புக் கோட்டையில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x