உளுந்தூர்பேட்டை ஏரி அருகே இளைஞர் சடலம்

உளுந்தூர்பேட்டை ஏரி அருகே இளைஞர் சடலம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந் தூர்பேட்டை அடுத்து உளுந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சு மணன் மகன் மணிகண்டன் (30). இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை - திருச்சி தேசியநெடுஞ்சாலையோரம் உள்ளஏரிக்கு அருகில் மணிகண்டன் சடலமாகக் கிடப்பதாக உளுந்தூர் பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவஇடத்திற்குச் சென்ற போலீஸார்உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த மணிகண்டனின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்றகோணத்தில் போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in