Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

வெந்நீர் கொட்டி காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

மதுரை மாவட்டம், திருமங் கலம் அருகே உள்ள சிவரக்கோட் டையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (29). இவரது மனைவி பஞ்சவர்ணம் (24). முதல் பிரசவத்துக் காக, விருதுநகர் பழைய ரயில்வே காலனியில் உள்ள தாய் வீட்டில் இருந்தார். கடந்த ஆகஸ்ட்டில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 27-ம் தேதி குழந்தை ஹர்சினியை குளிப்பாட்டும்போது, அருகே இருந்த வெந்நீர் குவளையைக் கையால் இழுத்து விட்டதில், வெந்நீர் பட்டு காயம் அடைந்தது. மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தது. விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x