Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

குண்டர் சட்டத்தில்4 பேர் கைது

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அருண் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் வேடசந்தூர் அருகே எரமநாயக்கன்பட்டி ஆர்.வி.எஸ்.நகரைச்சேர்ந்த கருப்புச்சாமி (24), மொட்டனம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ்(26), திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்த ஸ்டாலின்ஜோசப்(35), சின்னாளபட்டியைச் சேர்ந்த பாலச்சந்தர்(22) ஆகியோரை திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், திண்டுக்கல் எஸ்.பி., ரவளிபிரியா பரிந்துரையின் பேரில், இந்த நான்கு பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

இதையடுத்து நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x