Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

ராமநாதபுரம் அருகே வாலாந் தரவை கிராமத்தைச் சேர்ந்த மலைக்கள்ளன் மகன் மகேந்திரன் (30). இவர் மீது ராமநாதபுரம், கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன.

இவர் நேற்று வாலாந்தரவை யில் பதுங்கியிருந்தபோது, ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் மகேந்திரன் தனது கூட்டாளிகள் மூலம் கடந்த 10 நாட்களில் உச்சிப்புளி, திருப்புல்லாணி உள்ளிட்ட இடங்களில் 7 வழிப்பறியை நடத்தியது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x