தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்
Updated on
1 min read

வள்ளியூர் காந்தி காலனியைச் சேர்ந்தவர் குமார்(49). பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வள்ளியூரில் தேவர்கீழத் தெருவில் நேற்றுமுன்தினம் தூய்மைப் பணிக்கு சென்றபோது, சிவபாலன் (30) என்பவருக்கும், குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அரிவாளால் குமார் வெட்டப்பட்டார். வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குமாரை வெட்டியவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் வள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in