Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM

விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க இன்று இறுதி நாள்

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர் பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் புதுச்சேரி மாநிலம் இந்திராகாந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் டிசம்பர் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாமில் புதுச்சேரி, தமிழ்நாடு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த, 17 முதல் 21 வயது கொண்ட ஆண்கள் மட்டும் கலந்துக்கொள்ள, www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (28-ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்தவர்களும், டிப்ளமோ முடித்தவர்களும், கல்லுாரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிப்பவர்களும் விண்ணப் பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தினை 94990 55946 என்கிற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x