Published : 28 Nov 2020 03:18 AM
Last Updated : 28 Nov 2020 03:18 AM

திருப்பத்தூர் மாவட்டம் உருவாகி ஓராண்டு நிறைவு விரைவில் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை ஆட்சியர் சிவன் அருள் தகவல்

திருப்பத்தூர் மாவட்டம் உருவாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. விரைவில், மருத்துவக் கல்லூரிதொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத் தூர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதி தனி மாவட்டமாக உரு வாக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவராக சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, " வேலூர்மாவட்டத்துடன் இருந்த திருப்பத் தூர் மாவட்டம் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டு இன்றுடன் (நேற்று) ஓராண்டை கடந்துள்ளது.

புதிய மாவட்டம் உருவாக்கப் பட்ட பிறகு அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்துத் துறை களும் உடனுக்குடன் உருவாக்கப் பட வேண்டும். அதன்படி, திருப்பத் தூர் மாவட்டம் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு வருவாய், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறுதுறைகள் உடனுக்குடன் உருவாக் கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாணியம்பாடி அடுத்த செட்டி யப்பனூர் பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 45 கிலோ மீட்டர் தொலைவுள்ள சேலம் வரை 4 வழிச்சாலைக்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் சாலை அமைப்பதற்கான பணிகள்தொடங்கப்பட உள்ளன. அதே போல, திருப்பத்தூர் நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம் நடந்து வரு கிறது. விரைவில், பாதாள சாக் கடைத் திட்டம் மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வரப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டவுடன் 36 வார்டுகளிலும் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும்.

குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல, திருப்பத்தூர், கந்திலி, நாட்றாம் பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அரசு மருத்துவமனையில் பல் வேறு புதிய சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத் திலேயே பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு சிறப்பு பிரிவில் திருப் பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்து பரிசு பெற்றுள் ளது. கரோனா தடுப்பு நடவ டிக்கை கட்டுக்குள் உள்ளது. இது வரை 2 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக் காக நாட்றாம்பள்ளியில் தனியாக சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள் ளது. திருப்பத்தூர் நகர் பகுதியில் ரூ.109 கோடி மதிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் - தி.மலை சாலையில் ரூ.14 கோடி மதிப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுமானப்பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. விரைவில், இப்பணிகள் முடிக்கப்படும்.

மக்கள் நலத்திட்டப்பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் குறை தீர்வுக் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நடப்பாண்டில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 245 இடங்களில் சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதே போல், திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x