Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

கோமுகி அணையிலிருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றம்

கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்க முடியும். நீர் கொள்ளளவு 560.96 மில்லியன் கனஅடி வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்துள் ளதால் அணைக்கான நீர் வரத்து 560 கனஅடியாக உள்ளது.

அணையின் நீர் மட்டம் 44 அடியையும், மொத்த நீர் பிடிப்பு 489.56 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, வரத்து தண்ணீர் அப்படியே பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,865 ஏக்கர் விவசாய நிலம், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x