Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

நிவர் புயல் தற்காப்புக்காக மரக் கிளைகள் அகற்றம்

பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் வட கிழக்குப் பருவ மழை ஒரு வாரத்துக்கு முன்பு பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் உள்ள மரக் கிளைகள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. அருகிலேயே மின் வயர்கள் செல்வதால் உரசி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. தற்போது நிவர் புயலால் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

எனவே மரக் கிளைகளை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் நகரின் பல பகுதிகளிலும் இப்பணி நடைபெற்றது.

இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், மின்வயர்களில் மரக்கிளைகள் உரசினால் கண்டிப்பாக விபத்து ஏற்படும். இவற்றை பொதுமக்கள் தாங்களாகவே அகற்றக் கூடாது. மின்வாரிய ஊழியர்கள் மூலம் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x