Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

‘வேலைநிறுத்த போராட்டம் ரத்து’

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்கள், புதிய உணவு கொள்கை, மின்சார திருத்த சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தங்கள் ஆகியவற்றை கண்டித்து, நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று (நவ.26) ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தப் போராடத்துக்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், அரசியல் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இந்நிலையில், ‘நிவர்’ புயல், மழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் இந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் கூறியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்கள், கொள்கைகளை கண்டித்து இன்று (நவ.26) நாடு முழுவதும் வேலைநிறுத்தம், போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், ‘நிவர்’ புயல், மழை காரணமாக மாநில மையத்தின் ஆலோசனையின்படி, தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட மழை பெய்யும் மாவட்டங்களில் இந்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x