Published : 25 Nov 2020 03:15 AM
Last Updated : 25 Nov 2020 03:15 AM

விழுப்புரம் அருகே லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது

விழுப்புரம்

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவ லர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அருகே காந்தல வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி மகாலட்சுமிக்கு அவரது தந்தை ஆறுமுகம் கொடுத்த 4 சென்ட் நிலத்தை பாட்டா மாற்றம் செய்ய,மடப்பட்டு கிராம நிர்வாக அலு வலர் மகாலட்சுமியை அணுகியுள்ளார்.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி இதற்கு ரூ. 2,000 லஞ்சம் கேட்டுள்ளார். இப்பணத்தை கொடுக்க விருப்பம் இல்லாத சரவணன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸாரின் அறிவுரைப்படி சரவணன், கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமியிடம் நேற்று பணம் கொடுக்க சென்றார். டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான போலீஸார் கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமியை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x