மக்காச்சோளத்தில் புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்

மக்காச்சோளத்தில் புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
Updated on
1 min read

அமெரிக்கன் படைப் புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

விருதுநகர் அருகே உள்ள வீரச்செல்லையாபுரத்தில் அமெரிக்கன் படைப் புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களை அவர் பார்த்தார். பின்னர் மாணிக்கம் தாகூர் எம்பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் செலவு செய்து மக்காச் சோளம் பயிரிட்டுள்ளனர். வளர்ந்து பசுமையாகக் காட்சியளித்த மக்காச்சோளம் அமெரிக்க படைப் புழுக்களால் அழிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பயிர் பாதிக்கப்பட் டுள்ளது.

மக்காச்சோளம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இதேபோல் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in