சீராக குடிநீர் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகே மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.
பல்லடம் அருகே மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஊராட்சி நிர்வாகத்தால் வாரத்துக்கு ஒருமுறை அப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், மாதப்பூர் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு பல்லடம்போலீஸார் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு தினங்களுக்குள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in