கண்டாச்சிபுரம் அருகே தலைமை காவலர் உயிரிழப்பு

கண்டாச்சிபுரம் அருகே தலைமை காவலர் உயிரிழப்பு
Updated on
1 min read

பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முகமது அமானுல்லா(45). கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முற்பகல் விழுப்புரத்திலிருந்து கண்டாச்சிபுரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மேல்வாலை கிராமம் அருகே செல்லும்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த முகமது அமானுல்லாவை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in