Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

வேல் யாத்திரையை தடை செய்ய தேனி ஆட்சியரிடம் மனு

தேனி

ஆதித் தமிழர் பேரவை கிழக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர்கள் சுரேஷ், மணி ஆகியோர் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்கப்பட்டது. அதில், தேனி மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. இது மத, இன, சாதி மோதலை ஏற்படுத்தும். உயர் நீதிமன்றமும் வேல் யாத்திரைக்கு தடை விதித்துள்ளது. எனவே தமிழக அரசும், தேனி மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x