விருதுநகரில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published on

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் மாரிசெல்வம் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர், தேவேந்திர குலத்தார் மற்றும் வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரியும், பட்டியலை விட்டு வெளியேற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in