Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM

திருவண்ணாமலையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மண்டல பொறுப்பாளர் மோகன். அருகில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

அதிமுக (தெற்கு மாவட்டம்) சார்பில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி மற்றும் பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது.

மாவட்டச் செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எ்ஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன் னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மண்டல பொறுப்பாளர் மோகன் பேசும்போது, “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. கடந்த 1972-ல், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தோன்றியது அதிமுக. அடுத் தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல் பணியில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன் னாள் எம்எல்ஏக்கள் ஜெயசுதா, அரங்கநாதன், சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x