ஆஷா பணியாளர்கள் சார்பில் கள்ளக்குறிச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

ஆஷா பணியாளர்கள் சார்பில் கள்ளக்குறிச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
Updated on
1 min read

ஏஐடியூசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நவம்பர் 26-ம் தேதி பொதுவேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட, தமிழ்நாடு ஏஐடியுசி ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆயத்த கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆண்டாள் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாஞ்சாலி வரவேற்றார். ஏஐடியூசி அகில இந்திய செயலாளர் வகிதாநிஜாம் சிறப்புரரையாற்றினார். ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் ஆ.சவுரிராஜன், ஏஐடியூசி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஆ.வளர்மதி, ஏஐடியூசி மாவட்டப் பொருளாளர் டி.கோவிந்தராஜ் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்கள். மாவட்டக் குழ உறுப்பினர்கள் ஜான்சிராணி, கோவிந்தம்மாள், சாந்தி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in