Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தோர் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை

திண்டுக்கல்திண்டுக்கல்லில் வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பார்வையாளர் சிவசண்முகராஜா.

திண்டுக்கல்லில் வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப் பித்தவர்களின் வீடுகளுக்குச் சென்று திண்டுக்கல் மாவட்ட பார்வையாளர் சிவசண்முகராஜா நேற்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் சேர்க்கை, திருத்தம் பணிகளுக்கான சிறப்பு முகாம் கள் கடந்த இருநாட்களாக நடைபெற்றன.

இதுகுறித்து ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் துறை மேலாண்மை இயக்குநரும், திண்டுக்கல் மாவட்ட பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டு வாக் காளர் சேர்க்கைக்கு விண்ணப் பித்துள்ளவர்களின் விண்ணப் பங்களை சிவசண்முகராஜா ஆய்வு செய்தார்.

மேலும் வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர் களின் வீடுகளுக்குச் சென்று முறையாக விண்ணப்பித்தவர்கள் தானா எனக் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் வாக்காளர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x