Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 6 திருநங்கைகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 3 சென்ட் நிலப்பரப்பளவு கொண்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x