உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மறியலில் ஈடுபட்ட 125 பேர் கைது

உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மறியலில் ஈடுபட்ட 125 பேர் கைது
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 500-க்கும் மேற்பட்ட திமுகவினரை குத்தாலம் காவல் துறையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் திமுக இளைஞரணி சார்பில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் கிரீன் சர்க் கிள் பகுதியில் மாவட்ட இளை ஞரணி செயலாளர் ராஜாமார்த் தாண்டன், மாநகர செயலாளர் சுந்தர்விஜய் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்கக்கோரி முழக்கம் எழுப்பினர்.

இதையடுத்து, வேலூர் வடக்குகாவல் துறையி னர் அனுமதியின்றி சாலை மறிய லில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 45 பேரை கைது செய்தனர். அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை ஆற்காடு நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் தலைமையில், மறியலில் ஈடுபட்ட 40 பேரை திருப்பத்தூர் நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in