Published : 23 Nov 2020 03:13 AM
Last Updated : 23 Nov 2020 03:13 AM

புதிதாக 58 பேருக்கு கரோனா தொற்று

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று 58 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 32 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ள தாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,466-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்ற 18,027 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 168 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x