Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

முதுமலை வனத்தில் பெண் புலி உயிரிழப்பு

முதுமலை

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் சிங்காரா வனக் கோட்டத்துக்குட்பட்ட சீமார்குழி பகுதியில் வனத் துறையினா் ரோந்து சென்றபோது, புலியின் சடலத்தைப் பார்த்துள்ளனா். சுமார் 7 வயதான பெண் புலியின் நகங்கள் மற்றும் பற்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்து புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன் உடல் உறுப்புகள் மாதிரி, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

தாயை இழந்த நிலையில், இரண்டு குட்டிகள் நிர்கதியாய் வலம் வந்தன. அவற்றைவனத்துறையினர் மீட்டு, புலிகள் காப்பகத்துக்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர். விஷம் வைத்து பெண் புலி கொல்லப்பட்டதா? என்ற கோணத்தில் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x