Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

திருவாலங்காடு அடுத்த சின்னமாபேட்டையில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்

திருவள்ளூர்: திருவாலங்காடு அடுத்த சின்னமாபேட்டைக் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னமாபேட்டை கிராமம்,  விநாயகா நகர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, "கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்பகுதியில் வீடுகள் வரத் தொடங்கி இதுவரை சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. குறிப்பாக, மழைக் காலத்தில் சேறும், சகதியுமாக ஆவதால் பயன்பாட்டுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

இதுகுறித்து, ஊராட்சிமன்ற தலைவரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் பகுதியில் உடனடியாக சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x